எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

தேங்காய் சாதம், COCONUT RICE.

தேங்காய் சாதம்:-


தேவையானவை:- பாசுமதி அரிசி அல்லது சீரகச் சம்பா அரிசி அல்லது பச்சரிசி – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 கப், முந்திரிப் பருப்பு – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய், கடுகு, உளுந்து தலா – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு, வேர்க்கடலை – தலா மூன்று டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:- அரிசியைக் களைந்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சிறிது நெய் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வைத்து உதிராக வடித்துக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளித்து கருவேப்பிலை இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்க்கவும். இதில் உப்பைச் சேர்த்து சாதத்தில் கொட்டவும். நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி அதில் தாளித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி நிவேதிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...