எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 நவம்பர், 2010

KALKANDU VADAI.. கல்கண்டு வடை..

KALKANDU VADAI :-
NEEDED:-
URAD DHAL - 1 CUP
KALKANDU ( SUGAR BAR.. CRUSHED ) OR SUGAR - 1 CUP
SALT - 1 PINCH.
OIL - FOR FRYING.

METHOD :-
WASH AND SOAK URAD DHAL FOR 2 HOURS.
DRAIN WATER AND GRIND WELL .. ADD KALKANDU OR SUGAR AND GRIND IT INTO A FINE SMOOTH FLUFFY DOUGH.
HEAT OIL IN A PAN MAKE VADAIS AND FRY WELL. IT WILL BE GOOD FOR 3 DAYS.
ITS A CHETTINAD SPECIAL SWEET ITEM AND PREPARED AND SERVED MARRIAGES AND IN DEEPAVALAI AND IN PILLAIYAR NONBU .

கல்கண்டு வடை :-
உளுந்து - 1 கப்
கல்கண்டு (பொடித்தது) அல்லது ஜீனி - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொறிக்க..

செய்முறை :-
உளுந்தை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தண்ணீரை வடித்துவிட்டு நன்கு ஆட்டவும். பாதி ஆட்டியபின் கல்கண்டு அல்லது ஜீனி சேர்க்கவும். நன்கு மைய மாவானபின் எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொறிக்கவும். இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் இனிப்பு. திருமணங்கள்., தீபாவளி., பிள்ளையார் நோன்பு சமயங்களில் செய்து பரிமாறுவார்கள்.

10 கருத்துகள்:

  1. கல்கண்டு அல்லது சர்க்கரையில் இருக்கும் அழுக்கை நீக்க வேண்டாமா? என் அம்மா ச்ர்க்கரையை பாகு போல் காய்ச்சி அதில் சில திளிகள் பால் விடுவார்..அழுக்கு திரண்டு மேலே வரும். அது போல செய்து உளுந்து மாவில் மிக்ஸ் பண்ணலாமா?

    பதிலளிநீக்கு
  2. Kalakand vada saapite pala varusham achu..Super aa irruku vada..Thanks for visiting my space..

    பதிலளிநீக்கு
  3. ஐயோ அக்கா என்னுடைய பேவரிட் வடை..செய்து ரொம்ப நாள் ஆகிடுச்சு...சூப்பர்!!நிறைய செய்து அனுப்புங்க எனக்கு...

    பதிலளிநீக்கு
  4. சூப்பராக இருக்கு...செய்தது இல்லை...செய்து பார்க்க வேண்டியது தான்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி ராம்ஜி.,

    இதுக்கு அப்படி செய்ய முடியாது ரஃபீக்.. மாவு தண்ணியாகி விடும்.. எனவே அப்படியே போட்டு அரைக்கலாம்..

    பதிலளிநீக்கு
  6. நன்றி பிரியா..

    மேனகா நிச்சயம் அனுப்புறேன்..:))

    கீதா செய்து பார்த்து சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  7. நிறையதடவை கேள்விப்பட்டிருக்கேன். ஆனாலும் செய்யறதுக்கு பயம்.. சர்க்கரையை உளுந்துடன் சேர்த்தரைக்கும்போது, நீர்த்துடுமோ, செய்யவருமோன்னு ஏகப்பட்ட சந்தேகம். உங்க இடுகையை பார்த்தப்புறம் கொஞ்சம் தெளிவாயிட்டேன். ஒரு நாள் செஞ்சுபார்த்துடவேண்டியதுதான் :-))

    பதிலளிநீக்கு
  8. நன்றி பூங்குழலி..

    அப்புறம் செய்து பார்த்தீங்களா அமைதிச்சாரல்..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...