எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 செப்டம்பர், 2010

SPROUTED GREEN GRAM DOSA.. முளைவிட்ட பச்சைப் (பாசிப்) பயறு தோசை..


SPROUTED GREEN GRAM DOSA..:-
NEEDED;-
GREEN GRAM - 200 GMS.
BIG ONION - 1 CHOPPED
BEETROOT - 1/8 PIECE..
GREEN CHILLI - 1 NO.
GARLIC - 3 PODS.
GINGER - 1 INCH PIECE
RED CHILLI POWDER - 1/4 TSP
CRATED COCONUT - 1 TBLSPN
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED.
JEERA - 1 TSP .
SALT - 1 TSP
OIL - 20 GMS.
METHOD :-
WASH AND SOAK GREEN GRAM PREVIOUS DAY ITSELF AND AFTER 4 HOURS DRAIN THE WATER AND MAKE A BUNDLE WITH MUSLIN CLOTH OR COTTON CLOTH AND HANG IT OVERNIGHT OR KEEP IT IN A TIFFIN BOX OR CASSAROLE TIGHTLY COVERED .THE NEXT DAY MORNING IT SPROUTS .
TAKE THE SPROUTED GRAM ., CHILLI., GINGER., GARLIC., JEERA., BEETROOT., ONION., COCONUT ., SALT ., RED CHILLI POWDER ., CORRIANDER LEAVES IN A MIXER JAR AND GRIND COARSLY.
HEAT THE DOSA PAN . , AND SPREAD IT AS THIN DOSAS. POUR 1/2 TSP OIL AROUND IT.AND COOK WELL.. IT WILL TAKE TIME (5 MIN FOR A DOSA) . SO KEEP IT IN SIM AND COOK WELL .TURN THE OTHER SIDE ALSO . OTHERWISE CANT ABLE TO EAT .
SERVE HOT WITH SUNDAIKKAY THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.
பச்சைப் (பாசிப்) பயறு தோசை:-
தேவையானவை :-
பச்சைப் (பாசிப்) பயறு - 200 கிராம்.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பீட்ரூட் - 1 /8 துண்டு.
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 3 பல்
இஞ்சி - 1 இன்ச் துண்டு
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 20 கிராம்.
செய்முறை :-
பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைக்கவும். 4 மணி நேரம்கழித்து தண்ணீரை வடித்து மஸ்லின் துணி அல்லது காட்டன் துணியில் இறுக்க மூட்டையாகக் கட்டி தொங்கவிடவும் இரவு முழுவதும்..அல்லது ஒரு டிஃபன் பாக்ஸில் அல்லது காஸரோலில் போட்டு டைட்டாக மூடி வைக்கவும். மறுநாள் காலை முளை விட்டு இருக்கும்..
இந்த முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் .
தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாகத் தடவி எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நிதானமான தீயில் நன்கு வேகவைத்து எடுக்கவும். நன்கு வேகாவிட்டால் சாப்பிட முடியாது.. சூடான தோசையை சுண்டைக்காய்த் துவையல் அல்லது கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.

3 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...